
வெள்ளி, 9 செப்டம்பர், 2011
போதை மருந்து கடத்திய 184 பேருக்கு மரண தண்டனை

ஈரான் நாட்டில் சமீபத்தில் போதை மருந்து கடத்திய கே.ஹமிது, பி. காசிம், ஜே. உசேன், எம். நியாமக் என்ற நான்கு பேருக்கு கடந்த செவ்வாய் கிழமையன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.மேலும் இந்த ஆண்டு மட்டும் போதை மருந்து கடத்திய வழக்கில் இதுவரை 184 பேர் கைது செயப்பட்டு மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதை குறித்து எ.எஃ.பி செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது, உலகிலேயே சீனாவிற்கு அடுத்த இடமாக ஈரானில் தான் அதிகபடியாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றும், கடந்த ஆண்டு மட்டும் மரண தண்டனைக்கு ஆளானோர் எண்ணிக்கை 179 ஆக இருந்தது, ஆனால் இந்த ஆண்டு மரண தண்டனைக்கு ஆளானோரின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்து விட்டது. மேலும் இந்த புள்ளி விபரன்ங்கள் உண்மையல்ல என்றும் இதைவிட அதிகமானோர் மரண தண்டனைக்கு ஆளானவர்கள் என்று மனித உரிமை அமைப்பு கூறுகிறது. இதற்க்குக் ஈரான் அரசு சட்டம்,ஒழுங்கை நிலைநாட்ட இந்த மரண தண்டனை அவசியம் என்றும்,கொலை, பாலியல் பலாத்காரம், ஆயுதம் தாங்கியவர்கள் நடத்தும் கொள்ளை, போதை மருந்து கடத்தல், கள்ளத் தொடர்பு ஆகிய குற்றங்களை புரிந்தால் நீதிமன்றத்தால் நன்கு விரிவாகவும்,விரைவாகவும் விசாரணை நடத்திய பிறகே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது என ஈரான் அரசு விளக்கம் அளித்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக