திங்கள், 5 செப்டம்பர், 2011

ஜப்பானில் கடும் புயல்

நேற்று இரவு வடக்கு ஜப்பானை திடிரென கடும் புயல் தாக்கியது. இந்த புயலுக்கு தைபூன் தாலாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. திடிரென தாக்கிய இந்த புயல் மணிக்கு 108 கிலோ மீட்டார் வேகத்தில் பலத்த காற்றுடன் வடக்கு ஜப்பானில் உள்ள சிக்கொகு என்ற தீவை தாக்கியதால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டது. இதனால் இதுவரை இந்த புயலுக்கு 18 பேர் பலியானார்கள் மேலும் 50 பேர் காணாமல் போய்விட்டனர். திடிரென ஏற்ப்பட்ட இந்த தைபூன் தாலாஸ் புயலால் நாரா மற்றும் வகயாமா போன்ற நகரங்கள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும்,வடக்கு மத்திய ஜப்பானில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. ஆகையால் அப்பகுதியில் உள்ள 50000 மக்கள் உடனே பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டனர். மேலும், இந்த திடீர் புயல் தாக்குதலின் எதிரொலியாக பசுபிக் கடலில் உள்ள வணட்டு என்ற தீவில் கடலுக்கு கடியில் சுமார் 132 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7 புள்ளியாக பதிவாகியுள்ளது. மேலும்,இந்த நிலநடுக்கத்தால் எந்த வித ஆபத்து இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக