வெள்ளி, 2 செப்டம்பர், 2011

இன்று முதல் அரசு கேபிள் டிவி துவக்கம்

இன்று பகல் 12 :10 ௦மணிக்கு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அரசு கேபிள் டிவி என்ற சேவையை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். இந்த அரசு கேபிள் டிவி சேவையை துவங்குவதற்காக எம்.எஸ்.ஒ கல் மற்றும் கேபிள் ஆபரேட்டர்கள் வேளையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இதற்க்கான நிர்வாக இயக்குனராக ஐ.எ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டனர். தமிழகத்தில் மட்டும் 40 ௦ ஆயிரம் கேபிள் ஆப்ரேட்டர்கள் உள்ளனர் இதில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் ஆபரேட்டராக 1 கோடியே 45 லட்சம் இணைப்பு கொண்ட 34 ஆயிரத்து 344 ஆப்ரேட்டர்கள் சேர்ந்துள்ளனர். மேலும் இந்த புதிய சேவையான அரசு கேபிள் டிவி சேவையில் இலவச மற்றும் கட்டண சேனல்கள் ஒளிப்பரப்பாகும். இதில் முதல் கட்டமாக இலவச சேனல்கள் ஒளிபரப்பாகும். கட்டண சேனல்கள் அதற்க்கான கட்டணத்தை நிர்னைத்தவுடன் ஒளிப்பரப்பாகும்.மேலும் இந்த அரசு கேபிள் டிவி சேவைக்கான மாத சந்தா ரூபாய் 70 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் வசூலிக்கப்படும். கேபிள் டிவி ஆப்ரேட்டர்கலிடமிருந்து ரூபாய் 20 என ஒரு இணைப்புக்கு அரசு கேபிள் டிவி வசூலிக்கப்படும்.மேலும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று முதல் அரசு கேபிள் டிவி ஒளிப்பரப்பாகும். மற்ற மாவட்டங்களில் கேபிள் சேவையை அந்தந்த ஆப்ரேட்டர்கள் வழங்குகின்றனர்.

0 comments:

கருத்துரையிடுக