
ஞாயிறு, 4 செப்டம்பர், 2011
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்

நடந்த தேர்தல் அறிக்கையில் ஆ.தி.மு.கா வினர் பள்ளி மற்றும் கல்லுரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக எல்கார்ட் நிறுவனம் ஒரு லேப்டாப்பின் விலை ரூபாய் 14 ஆயிரம் விகிதம் கொள்முதல் மேற்கொள்ள மறு ஒப்பந்தபுல்லிகளை கோருவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகள் பிளஸ் டு படித்து வரும் மாணவர்களுக்கும், அரசு கலை அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிகில் படித்து வரும் மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்திற்கான முதல் கட்டமாக 6 ஆயிரம் லேப்டாப்கள் கொள்முதல செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 9.12 லட்சம் லேப்டாப்கள் அளிக்கப்படுகிறது. மேலும் இதற்க்கான விழா அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் தமிழக அரசு திட்டத் தொடக்க விழாவுக்காக குறைந்த எண்ணிக்கையிலான லேப்டாப்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்படி கணினி நிறுவனம் குறிப்பிட்ட விலைக்கே 6 ஆயிரம் லேப்டாப்களை தமிழக அரசு கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் மறு ஒப்பந்த புள்ளிகள் மூலம் தமிழக அரசு மலிவு விலையில் அதாவது ஒரு லேப்டாப் விலை ரூபாய் 14 ஆயிரத்துக்கும் குறைவாக 9.1 லட்சம் லேப்டாப்களை கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளது. செப்டம்பர் 21 ஆம் தேதி ஒப்பந்தபுள்ளி அளிப்பதற்கான கடைசி தேதி என்று அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக