
வெள்ளி, 9 செப்டம்பர், 2011
விரைவில் புதிய விதிமுறை திருட்டு போன செல்போனை செயலிழக்க வைக்க

நவீன தொழில்நுட்பம் அதிகம் நிறைந்து வரும் இன்று செல்போன் இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை. அனைவரும் செல்போன் உபயோகித்து வருகிறார்கள். இவ்வாறு செல்போன் உபயோகித்து வரும் பெரும்பாளானோர் சரித்தரத்தில் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு செல்போன்னாவது தொலைத்திருப்பார்கள் அல்லது திருட்டு போயிருக்கும். இவ்வாறு தங்களது செல்போன் திருட்டு போயிருந்ததோ அல்லது துளைந்துபோனதையோ அறிந்தவர்கள் முதலில் தங்களின் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பார்ப்பார்கள் ஆனால் தொடர்பு கொண்டும் பயனளிக்காத வகையில் போன் சிவிட்ச் ஆப் அல்லது நாட் ரீச்சபிள் என்று பதில் வரும். ஏனென்றால் போனை திருடியவர்கள் முதலில் செய்வது போனில் உள்ள சிம்கார்டை அகற்றி விட்டு அதை கள்ளச் சந்தையில் விற்று விடுவார்கள்.இதனால் கள்ளச் சந்தையில் பல நூறு கோடிக்கு செல்போன்கள் வர்த்தகம் நடைபெறுகிறது. இவ்வாறு திருட்டு போன அல்லது தொலைந்து போன செல்போனை செயலிழக்க வைக்க புதிய விதிமுறையை விரைவில் தர இருக்கிறது தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்). ஏற்க்கனவே கடந்த ஆண்டு இதைக்குறித்து டிராய் இந்த செல்போன் திருட்டை முடக்குவதற்கான வழியை செல்போனே வாடிக்கையாளருக்கும், செல்போனே நிறுவனங்களுக்கும் தங்களது ஆலோசனையை தெரிவிப்பதாக கூறியிருந்தது. இந்த புதிய வழியை குறித்து டிராய் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் திருட்டு போன செல்போன்களை செயல் இலக்கவைக்க உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துள்ளது. இதைக்குறித்து புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக