ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

இனி போஸ்ட் ஆபிஸில் விசா சேவைகள்

கிராமங்கள் மற்றும் சிறுநகரங்களில் உள்ள மக்கள் இதுவரை பாஸ்போர்ட் மற்றும் விசா பெறுவதற்காக நீண்ட தூரம் செல்லும் சூழ்நிலையும், இதற்காக பல போளிமுகவர்களிடம் ஏமாறும் நிலையம் உள்ளது. எனவே இந்த நிலையை மாற்ற இனி கிராமம் மற்றும் சிறுநகர்புறங்களில் போஸ்ட் ஆபிஸில் பாஸ்போர்ட் மற்றும் விசா தொடர்பான சேவைகளை பெறலாம். இதற்க்கான ஒப்பந்தத்தை உலக முழுவதும் உள்ள தூதரக வாயிலாக நிர்வாக பணிகளை செய்து வரும் முன்னணி அவுட்சோர்சிங் நிறுவனமான வி.எப்.எஸ் குளோபல் மற்றும் அஞ்சல் துறையினர் கடந்த மாதம் 8 ஆம் தேதி ஒப்பந்தம் மேற்கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி விசா பெறுவதற்கான விண்ணப்ப விநியோகங்கள், கட்டண வசூல்,விசா தொடர்பான தகவல்கள் மற்றும் இதர சேவைகள் தபால் நியாங்களில் பெறலாம். மேலும், ஸ்பீடு போஸ்ட், கொரியர் சேவைகளை கொண்ட விசா,பாஸ்போர்ட் ஆகியவைகளை வி.எப்.எஸ் குளோபல் கிளைகளை கொண்டு தூதரங்கள் இடையே விரைந்து அனுப்புவதர்க்காகன திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த புதிய சேவையினால் கிரமாபுரம் மற்றும் சிறுநகரங்களில் உள்ள மக்கள்கள் விசா விண்ணப்பம் வேண்டி நகர் மற்றும் பெருநகரங்களை தேடி போகும் அவசியம் இருக்காது.

0 comments:

கருத்துரையிடுக