புதன், 5 அக்டோபர், 2011

குவைத்தில் எண்ணெய் குழாயில் காஸ் வெடித்து தமிழர் 4 பேர் பலி

குவைத்தில் 3 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலயம் உள்ளது. அதில் நாள் ஒன்றுக்கு 4.6 லட்சம் பேரல் எண்ணெய் சுத்திகரிக்கும் மினா அல் அகமதி எண்ணெய் சுத்திகரிக்கும் ஆலயம் ஒன்று. கடந்த வாரம் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலயத்தில் ஊழியர்கள் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்கு உள்ள காஸ் குழாய் வெடித்து சம்பவ இடத்திலே பணியில் ஈடுபட்டிருந்த 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தார்கள்.
உயிர் இழந்த 4 பேரும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் பெயர் ராஜாராம் லட்சுமையா ரெட்டி, லோகநாதன் பொன்னையா செந்தில்வேல், ஜானகி ராமன் அர்ஜுனன் மற்றும் சிவசந்திரன் சண்முகம் என மினா ஆளையமும் இந்தியதூதரகமும் உறுதிபடுத்தியது.மேலும 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடலை இந்தியா அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது. என்னை குழாயில் இருந்து காஸ் வெளியானதால்தான் இந்த விபத்து ஏற்ப்பட்டது என தெரிகிறது. நன்றி தினகரன்.காம்.  

0 comments:

கருத்துரையிடுக