சனி, 5 டிசம்பர், 2009

417 ஹஜ் பயணிகள் சென்னை திரும்பினர்.


தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் செய்தவர்களில் முதல் கட்டமாக 417 பேர் சென்னை திரும்பினர்.தமிழகம், புதுச்சேரியில் இருந்து 4,012 பேர் கடந்த அக்டோபர் மாதம் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். பக்ரீத் அன்று நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டனர். குழுவில் இடம்பெற்றிருந்த தமிழகத்தை சேர்ந்த 417 பேர், சவுதி அரேபியன் விமானத்தில் நேற்று காலை சென்னை வந்தனர்.அவர்களை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மைதீன்கான் வரவேற்றார். உறவினர்களும் நண்பர்களும் கட்டித்தழுவி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.அமைச்சர் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டைவிட இந்தாண்டு கூடுதலாக ஹஜ் பயணிகள் சென்றனர்.இன்று முதல் 12ம் தேதி வரை 14 சிறப்பு விமானங்களில் ஹஜ் குழுவினர் சென்னை திரும்புகின்றனர்.ஹஜ் பயணிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் வசதி செய்து கொடுக்கிறது என்றார்.

0 comments:

கருத்துரையிடுக