வேலைவாய்ப்பு அலுவலர்;நாகர்கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலைவாய்ப்பு அலுவலர்;நாகர்கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 27 அக்டோபர், 2009
1200 அரசு பணியிடங்களுக்கு நவம்பரில் குரூப்1 தேர்வு
ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப்பணிகளுக்கு வரும் நவம்பரில் இருந்து அறிவிப்பு வெளியிட உள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தலைவர் காசிவிஸ்வநாதன் கூறினார். சேலம் அரசு கலைக்கல்லூரியில் போட்டித் தேர்வுகள் பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட காசி விஸ்வ நாதன் நிருபர்களிடம் நேற்று கூறியது:
அரசு கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வுகள் எழுதுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தொடர்ந்து ஓராண்டாக 12க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் போட்டித்தேர்வு குறித்து பேசி வருகிறேன். வரும் நவம்பர் மாதம் 1,200 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள் நடக்க உள்ளது. இதில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சார்பதிவாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கும். வனத்துறை ரேஞ்சர் பணிக்கு 70 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு பட்டம் படித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். குரூப் 2 தேர்வுகளை எந்த பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் எழுத முடியும்.
பட்ட மேற்படிப்புகள் துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள மட்டுமே பயன்படும். அரசு வேலைக்கு செல்ல வேண்டுமானால் கட்டாயமாக அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும். விடைத்தாள் வெளிப்படையாக திருத்தப்படுவதால் தங்கள் விடைத்தாள் குறித்தும் மாணவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்புள்ளது. அரசு வேலையில் பெண்களுக்கு 30 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காசிவிஸ்வநாதன் கூறினார்.
Labels:
அரசு,
வேலை,
வேலைவாய்ப்பு அலுவலர்;நாகர்கோவில்
புதன், 14 அக்டோபர், 2009
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அறிக்கை
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்த குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10ம் வகுப்பும், அதற்கு மேலும் உள்ள கல்வி தகு தியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்து வரும் பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 1.10.09 முதல் 30.11.09 தேதி வரையிலான காலத்திற்கு உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகி றது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.09.2009 தேதியில் 5 ஆண்டுகள் நிறைவு செய் துள்ள பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அடை யாள அட்டை மற்றும் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் அலுவ லக வேலை நாளில் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பத்துடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து நவம்பர் மாத இறுதிக்குள் அளிக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே உதவித்தொகையை பெற்றுவரும் பயனாளிகள் இந்த உதவித்தொகையை தொடர்ந்து பெற வேண் டும் என்றால் சுய உறுதி மொழி ஆவ ணத்தை ஆண்டிற்கு ஒரு முறை சமர்ப்பிக்க வேண் டும். இதன்படி 30.9.2009 வரையான காலத்திற்கு உதவித்தொகை பெறும் பயனாளிகள் தொடர்ந்து உதவித்தொகை பெறுவதற்கு சுய உறுதிமொழி ஆவணத்தை அதற்குரிய படிவத்தில் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதில் இதுவரை வங்கியில் வரவு வைக்கப்பட்ட வங்கி கணக்கு விபரம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவற்றை மறுபரிசீலனைக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10ம் வகுப்பும், அதற்கு மேலும் உள்ள கல்வி தகு தியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்து வரும் பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 1.10.09 முதல் 30.11.09 தேதி வரையிலான காலத்திற்கு உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகி றது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.09.2009 தேதியில் 5 ஆண்டுகள் நிறைவு செய் துள்ள பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அடை யாள அட்டை மற்றும் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் அலுவ லக வேலை நாளில் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பத்துடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து நவம்பர் மாத இறுதிக்குள் அளிக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே உதவித்தொகையை பெற்றுவரும் பயனாளிகள் இந்த உதவித்தொகையை தொடர்ந்து பெற வேண் டும் என்றால் சுய உறுதி மொழி ஆவ ணத்தை ஆண்டிற்கு ஒரு முறை சமர்ப்பிக்க வேண் டும். இதன்படி 30.9.2009 வரையான காலத்திற்கு உதவித்தொகை பெறும் பயனாளிகள் தொடர்ந்து உதவித்தொகை பெறுவதற்கு சுய உறுதிமொழி ஆவணத்தை அதற்குரிய படிவத்தில் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதில் இதுவரை வங்கியில் வரவு வைக்கப்பட்ட வங்கி கணக்கு விபரம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவற்றை மறுபரிசீலனைக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
வேலைவாய்ப்பு அலுவலர்;நாகர்கோவில்