வியாழன், 27 ஆகஸ்ட், 2009

ஹஜ் டிக்கெட் ஒதுக்கீட்டில் மத்திய மந்திரி முறைகேடு செய்ததாக பிரதமரிடம் பரபரப்பு புகார்

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணத்துக்கு இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 57 ஆயிரம் பேர் ஹஜ் புனிதப் பயணத்துக்கு வரலாம் என்று இந்தியாவுக்கு சவூதி அரேபியா அறிவித்தது. இதில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் முஸ்லிம்கள் மாநில ஹஜ் கமிட்டிகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு சென்றனர்.
47 ஆயிரம் பேரை அழைத்துச் செல்லும் பொறுப்பு தனியார் டிராவல் ஏஜெண்டுகள் மற்றும் டூர் ஆபரேட்டர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்களை அழைத்து செல்வதற்கு என்றே இந்தியாவில் ஏராளமான டிராவல் ஏஜென்சிகள் உள்ளன.
இந்த ஏஜெண்டுகள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட அளவு ஹஜ் பயணிகளை அழைத்து செல்லலாம் என்ற ஒதுக்கீடு முறை உள்ளது. சவூதி அரேபிய அரசு தன் வழிக்காட்டி பட்டியலில், “டூர் ஆபரேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் 600 பேர் வரை அழைத்து வர அனுமதி கொடுக்கலாம்” என்று கூறியுள்ளது. இந்த விதி மீறப்பட்டுள்ளது.
தனியார் டூர் ஆபரேட்டர்களுக்கு ஹஜ் புனித பயணத்துக்கான டிக்கெட் ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்பட்டு முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஹஜ் பயண தனியார் டூர் ஆபரேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் சராசரியாக 155 டிக்கெட்டுக்களே அனுமதிக்கப்பட்டன.
ஆனால் அல்ஹிந்த் டிராவல்சுக்கு மட்டும் 1700 டிக்கெட் ஒதுக்கீடு வாரி வழங்கப்பட்டது. கேரளாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த டிராவல்ஸ் நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இதன் மூலம் இந்த டிராவல்ஸ் நிறுவனம் ஹஜ் பயணிகள் ஒவ்வொருவரிடமும் கூடுதலாக 30 சதவீதம் வரை பணம் சம்பாதித்து முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மத்திய மந்திரி இ.அகமதுவுக்கும், அல்ஹிந்த் டிராவல்சுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அகமது தன் செல்வாக்கை பயன்படுத்தி கூடுதல் டிக்கெட் ஒதுக்கீட்டை அல்ஹிந்த் டிராவல்சுக்கு பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆட்சியின்போது இ.அகமது வெளியுறவுத் துறை மந்திரியாக இருந்தார். இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தலைவரான அவர் மலப்புரம் தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக 6 தடவை எம்.பி. ஆக தேர்வானவர்.
காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள அவர் தலையீட் டினால் ஹஜ் பயணிகள் தேர்விலும் குழப்பம் ஏற் பட்டதாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், முஸ்லிம்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஹஜ் பயணிகள் தேர்வாகிறார்கள். ஆனால் கடந்த ஆண்டு அகமது தலையீட்டினால் பாரபட்சமான சூழ்நிலை உருவானது. 3.3 கோடி முஸ்லிம்கள் வசிக்கும் உத்தரபிரதேசத்தில் இருந்து 1440 ஹஜ் பயணிகளே தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால் 75 லட்சம் முஸ்லிம்களே வசிக்கும் கேரளாவில் இருந்து 9 ஆயிரத்து 245 பேர் ஹஜ் பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை தனியார் டிராவல்சில் செல்ல வைத்து முறைகேடு நடந்துள்ளது.
அகமதுவின் இந்த நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாராளுமன்ற மேல்சபை துணைத் தலைவர் ரஹ்மான் கான் தலைமையில் முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமரிடம் பர பரப்பு புகார் மனு கொடுத்துள்ளனர்.
ஹஜ் பயண நிர்வாக அமைப்பில் மாற்றம் செய்யவும், தனியார் டிராவல்ஸ் ஏஜெண்டுகளுக்கு டிக்கெட் ஒதுக்கீட்டை வரை முறைப்படுத்தவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக