வியாழன், 27 ஆகஸ்ட், 2009
ஹஜ் பயணிகள் அனைவருக்கும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி - தமிழக அரசு
சவூதி அரேபியாவுக்கு செல்லும் ஹஜ் பயணிகள் அனைவருக்கும் பன்றிக்காய்ச்சலுக்கு எதிரான தகுந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகொள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு உறுப்பினர் மற்றும் செயல் அலுவலர் கா.அலாவுதீன் செய்தியாளர்களை சந்தித்தார்,
அப்போது அவர், ஹஜ்ஜுக்காக சவூதி அரேபியாவுக்கு செல்லும் 65 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 12 வயதுக்குட்பட்ட பயணிகளுக்கு சவூதி அரசு, தடை எதுவும் விதிக்கப்படவில்லை என தெரிவித்தார். ஆனால், இது தொடர்பாக சில நிபந்தனைகளை சவூதி அரசு விதித்துள்ளதாக அலாவுதீன் கூறினார். இதன்படி இவ்வாண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்வோர் பருவகால புளூ காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி போட்டதற்கான தகுந்த தடுப்பூசி சான்றிதழை ஹஜ் விசா பெறுவதற்கு இருவாரங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.நாட்பட்ட மற்றும் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இவ்வாண்டில் தங்களுக்கான ஹஜ் மற்றும் உம்ரா பயணத்தை அவரவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தள்ளிப்போடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக அலாவுதீன் கூறினார்.
Labels:
அரசு,
பன்றிக் காய்ச்சல்,
ஹஜ்
0 comments:
கருத்துரையிடுக