புதன், 2 செப்டம்பர், 2009

ஹஜ் ஒதுக்கீடு விதிகளில் மாற்றம்

ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்கான ஒதுக்கீடு நடைமுறைகளில் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகள் ஒதுக்கீட்டில் வெளிப்படையான நடைமுறையைக் கடைபிடிக்கும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்களுக்கு (Tour Operators) ஹஜ் யாத்திரை முன் அனுபவம் இல்லாவிட்டாலும் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கும் ஹஜ் யாத்திரை ஒதுக்கீடு வழங்க மத்திய வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

சுற்றுலா நிறுவனங்களுக்குரிய விதிமுறைகளின்படி பதிவு செய்யப்பட்டுள்ள தகுதியான நிறுவனங்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்திருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பல்வேறு நீதிமன்றங்களில் இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தலைமையில் புதுடெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில், ஹஜ் ஒதுக்கீட்டு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக