ISRO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ISRO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 மார்ச், 2010

இஸ்ரோவில் தீவிரவாதி தாக்குதல் கட்டுக்கதை - அமைச்சர்

பெங்களூரில் உள்ள `இஸ்ரோ' மையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 2 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாகவும், அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஜாதவ் என்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் திருப்பி சுட்டதால் அவர்கள் தப்பியோடி விட்டதாகவும் நாடு முழுவதும் தகவல் வெளியாகி பரபரப்பானது. 
ஜாதவ் மூலம்தான் இந்த தகவல் வெளியானது. ஆனால் அப்படி ஒரு தாக்குதல் சம்பவமே அங்கு நடக்கவில்லை என்று கர்நாடக உள்துறை மந்திரி வி.எஸ்.ஆச்சார்யா அந்த மாநில மேல்-சபையில் நேற்று தெரிவித்தார்.

புதன், 21 அக்டோபர், 2009

சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்ற அமெரிக்க விஞ்ஞானி இஸ்ரேல் உளவாளி!

இஸ்ரோவின் சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவர்ட் டேவிட் நோசட் ஒரு இஸ்ரேல் உளவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இஸ்ரோவின் முக்கியத் தகவல்கள் எதுவும் இவரிடம் பகிர்ந்தளிக்ப்படவில்லை என்று இஸ்ரோ விளக்கியுள்ளது.
நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானி நோசட், சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க குழுவில் இடம் பெற்றிருந்தார். சந்திரயான் திட்டத்தில் இவரும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் இவர் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேல் உளவுப் பிரிவு அதிகாரி ஒருவரிடம் முக்கியத் தகவல்கள் அடங்கிய கோப்பைக் கொடுக்க முயன்றதாக நோசட் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறையில் பணியாற்றி வந்த நோசட், நாசாவிலும் இடம் பெற்றிருந்தார். 52 வயதாகும் நோசட், திங்கள்கிழமை எப்பிஐ அதிகாரிகளால் கைது செய்ய்பட்டார்.
இதுகுறித்து இஸ்ரோ அறிவியல் செயலாளர் பாஸ்கர நாராயணா கூறுகையில், இஸ்ரோ மையங்களுக்கு இருமுறை நோசட் வந்துள்ளார். இருப்பினும் முக்கிய மற்றும் தடை  செய்யப்பட்ட பகுதிகளுக்கு அவர் அனுமதிக்கப்பட்டதில்லை. இஸ்ரோவின் பாதுகாப்புக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. மேலும், இஸ்ரோவின் திட்டங்கள் தொடர்பான எந்த முக்கியத் தகவலும் அவரிடம் பகிர்ந்தளிக்கப்படவில்லை. நோச்ட கைது  நாசாவின் உள் விவகாரம். இதுகுறித்து நாம் கருத்து கூற முடியாது என்றார்

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

ஓசன்சாட்-2 - பி.எஸ்.எல்.வி. மூலம் நாளை ஏவப்படுகிறது


இந்தியாவின் கடல் ஆய்வு செயற்கைக் கோளான ஓசன்சாட்-2 நாளை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.கடலில் மீன்வளத்தைக் கண்டறிவது, வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்டவை தொடர்பான பணிகளுக்காக இந்த செயற்கைக் கோள் செலுத்தப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் நாளை ஓசன்சாட்-2 விண்ணில் செலுத்தப்படவுள்ளது.970 கிலோ எடையுடன் கூடிய ஓசன்சாட் செயற்கைக் கோளுடன், ஆறு சிறிய ரக செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்தவுள்ளது பிஎஸ்எல்வி.இந்த ஆறு சிறிய செயற்கைக் கோள்களில் நான்கு ஜெர்மனியைச் சேர்ந்தவை.
மற்ற இரண்டில் ஒன்று சுவிட்சர்லாந்து மற்றும் இன்னொன்று துருக்கியைச் சேர்ந்ததாகும்.பிஎஸ்எல்வியை செலுத்துவதற்கான இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. தற்போது அது இயல்பான நிலையில் இருப்பதாக இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் எஸ்.சதீஷ் தெரிவித்தார்.பி.எஸ்.எல்.வி மூலம் இதுவரை 15 முறை செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.


நாளை செலுத்தப்படவுள்ளது பி.எஸ்.எல்.வி- சி14 ரகமாகும்.நாளை முற்பகல் 11 மணிக்கு பி.எஸ்.எல்.வி. செலுத்தப்படவுள்ளது.துணை குடியரசுத் தலைவர் பார்க்கிறார்...பி.எஸ்.எல்.ஏ. ஏவப்படுவதை துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி நாளை நேரில் பார்வையிடுகிறார். இதற்காக இன்று மாலை 4.50 மணிக்கு அவர் சென்னை வருகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் அவர் ஸ்ரீஹரிகோட்டா செல்கிறார்.நாளை மறுநாள் அங்கிருந்து புறப்பட்டு 4.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து 4.50 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

சனி, 5 செப்டம்பர், 2009

இந்திய கிராமங்களை இணைக்க செயற்கைகோள்-இஸ்ரோ

இந்தியாவில் சுமார் 50 ஆயிரம் கிராமங்கள் எந்த தொலை தொடர்பு வசதியும் இல்லாமல் இருக்கிறது. இந்த குறையை போக்கும் வகையில் இஸ்ரோ புதிய செயற்கோளை வடிவமைத்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் கிராமங்கள் தகவல் தொடர்பு வலையில் இணைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொச்சியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

நமது நாட்டில் 6 லட்சத்துக்கும் மேலான கிராமங்கள் இருக்கிறது. இதில் சுமார் 50 ஆயிரம் கிராமங்கள் தொலை தொடர்பு வசதியில்லாமல் இருக்கிறது.

இந்த கிராமங்களை இணைக்க புதிய செயற்கோள் ஒன்றை வடிவமைத்து வருகிறோம். இது இன்னும் இரண்டரை ஆண்டுகளில் விண்ணில் செலுத்தப்படும்.

சந்திரயான் 1 திட்டத்தில் சில பிரச்சனைகள் இருப்பதை நாங்கள் முன்கூட்டியே கணித்திருந்தேம். இதனால் முக்கிய சோதனைகளை விரைவாகவே முடித்துவிட்டோம். நாங்கள் திட்டமிட்டவற்றில் 95 சதவீத தகவல்களை பெற்று விட்டோம்.

தற்போது அந்த தகவல்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதற்கு இன்னும் 6 மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என்றார்.


ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

சந்திரயானுடன் தொடர்பு இழந்துவிட்டோம்: இஸ்ரோ

நிலவை ஆராய இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 விண்கலத்துடனான அனைத்து தொடர்புகளையும் தாம் இழந்துவிட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான் கலத்தில் இருந்து வந்துகொண்டிருந்த சமிஞ்சைகள் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் முழுமையாக நின்றுவிட்டதாகவும், தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்த செய்யப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.

கலன் செயல் இழந்ததற்கான காரணம் குறித்து ஆராயப்படுவதாக இந்த திட்டத்தின் இயக்குனர் அண்ணாதுரை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதியன்று சென்னைக்கு வடக்கேயுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் கடந்த நவம்பர் மாதத்திலும் பின்னர் இவ்வருடம் ஜூன் மாதத்திலும் பல சிக்கல்களை சந்தித்திருந்தது.

சந்திரயான் பயணத்தின் அறிவியல் நோக்கங்கள் நிறைவேறிவிட்டதாகவும், தாங்கள் பெற எண்ணிய தரவுகளில்ள் 95 சதவீதம் வரையிலானவை கிடைத்துவிட்டதாகவும் திட்ட இயக்குனர் அண்ணாதுரை கூறினார்

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

கூகுள் எர்த்க்கு (Google Earth) போட்டியாக இஸ்ரோ வின் புதிய இணையதளம்

கூகுள் எர்த் இணையதளத்தை போல், இந்தியாவின் எந்த இடத்தையும் பார்க்க உதவும் புதிய இணையதளத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தொடங்கி உள்ளது. இதில் ரோட்டில் நிற்கும் ஒரு காரைக்கூட தெள்ளத்தெளிவாக பார்க்க முடியும்.
கூகுள் எர்த் இணையதளம் உலக அளவில் பிரபலமானது. இதில் இந்தியாவில் இருக்கும் ஆண்டிப்பட்டி கிராமத்தில் இருந்து அமெரிக்காவின் நியுயார்க் நகரம் வரையில் எந்த இடத்தையும் தெள்ளத்தெளிவாக பார்க்க முடியும். இவை எல்லாம் செயற்கைக்கோள் மூலம் படம் பிடிக்கப்பட்டவை. ஒரு காரின் நம்பர் பிளேட்டை கூட இதில் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், எதிர்ப்புகள் எழுந்ததால் பாதுகாப்பு பிரச்னைகளுக்காக விண்ணில் இருந்து படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை குறிப்பிட்ட அளவுக்கு மேல் பார்க்க முடியாத அளவுக்கு ஆக்கப்பட்டது.
கூகுள் எர்த்துக்கு போட்டியாக இப்போது இந்தியாவின் இஸ்ரோ புதிய இணையதளத்தை தொடங்கி உள்ளது.http://bhuvan.nrsc.gov.in/ என்ற அந்த இணையதளத்தில் சென்றால், இந்தியாவின் எந்த நிலப்பரப்பையும் தெள்ளத்தெளிவாக பார்க்க முடியும். அதன் துல்லிய அளவு, 10 மீட்டர் முதல் 55 மீட்டர் உயரம் வரை. இதன் மூலம் ரோட்டில் உள்ள ஒரு காரை கூட இந்த இணையதளம் மூலம் பார்க்க முடியும்.
ஆனால், தீவிரவாதிகள், தேச துரோகிகளுக்கு உதவிடும் வகையில் இந்த இணையதளம் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக, பாதுகாப்பு பகுதிகள், ராணுவ சம்பந்தப் பட்ட இடங்கள், முக்கிய இடங்கள் ஆகியவை குறிப்பிட்ட அளவுக்கு மேல் துல்லியமாக பார்க்க முடியாது. இதில் உள்ள காட்சிகள் ஒரு ஆண்டுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்திய செயற்கைக்கோள்கள் கார்டோசாட் 1, கார்டோசாட் 2 ஆகியவை மூலம் முப்பரி மாணத்தில் படம் பிடிக்கப்பட்டவை.