வியாழன், 22 செப்டம்பர், 2011
தூக்கு போடும் வேலைக்கு ஆட்கள் தேவை
கொழும்புவில் உள்ள வெலிகந்தை சிறச்சாலையில் தூக்கில் போடும் பணிக்காக ஆட்கள் தேவைபடுவதால் தூக்கு தண்டனை நிறைவேற்ற கூடிய ஆட்கள் தேவை என விளம்பரம் ஒன்றை விரைவில் வெளியிட போவதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்க்கனவே தூக்கு தண்டனை நிறைவேற்ற நியமிக்கப்பட்டவர் தற்போது சிறை காவலராக பதவி உயர் பெற்று சென்றுவிட்டதால் தூக்கு தண்டனையை நின்ரைவேற்ற ஆட்கள் இல்லை.
இந்நிலையில் தற்போது கொழும்பு வெலிகந்தை சிறைச் சாலையில் தூக்கு தண்டனை கைதிகள் மொத்தம் 357 பேர் இருப்பதாக சிறை துறை தலைவர் பி டபிள்யு கொடிப்பிலி பிபிசியில் தெரிவித்தார். தற்போது தூக்கு தண்டனை நிறைவேற்றுபவர் தனது ௨௨ ஆம் வயதில் இந்த பணிக்கு வந்ததாகவும்,வறுமையினால் தன் தந்தை செய்த பணிக்கு தானும் சேர நேரிட்டது என்றும், இருபினும் தன்னுடைய பனி காலத்தில் யாருக்கும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்றும் ,இது இவருக்கு மிக சந்தோஷத்தை ஏற்ப்படுத்தியது என்றும் அந்த பணியாளார் தெரிவித்தார்.நன்றி பிபிசி தமிழ்.
0 comments:
கருத்துரையிடுக